தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு பலி கிராம மக்கள் பீதி

63பார்த்தது
தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு பலி கிராம மக்கள் பீதி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு , காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வட்டம் ஆசனூர் அடுத்த ஒங்கல்வாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவிக்குமார் என்பவரது பசுமாட்டை தோட்டத்தில் கட்டி வைத்திருந்த நிலையில் நேற்றய முன் தினம் இரவு வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை பசுமாட்டை தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் ஆசனூர் பகுதியில் நீண்ட நாட்களாக ஊருக்குள் நுழைந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி