பவானிசாகர் அணைக்கு 2, 489 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

1472பார்த்தது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து வந்தது.
இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69. 57 அடியாக சரிந்து உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 771 கன அடி நீர் வந்த நிலையில் இன்று 2, 489 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2, 300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடியும்
, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2, 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24. 62 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 10. 07 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21. 98 அடியாகவும் உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி