சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே அதிகாலை முதலே கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பஸ் நிலையம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன கடைகளில் தொடர்ந்து அதிகாலைகளை கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்த நிலையில் அதன் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
150 ரூபாய் குவாட்டர் ஒன்றுக்கு 200 ரூபாயும், 250 ரூபாய் குவாட்டர் ஒன்றுக்கு 300 ரூபாயும், பீர் வகைகள் 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்று பவானிசாகர் பகுதியில் சில இடங்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிகாலை முதலே படு ஜோராக நடைபெற்று வருவதாகவும் மதுவிலக்கு காவல் துறையினர் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இது போன்று கள்ளத்தனமான மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பவானிசாகர் சுற்றியுள்ள கடைகளில் பான் மசாலா பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாகவும், அதையும் தாண்டி சில சில இடங்களில் கஞ்சா விற்பனையும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கும் போது மக்கள் உடனடியாக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.