ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு வந்தனர்.
அதனை வாங்குவதற்காக திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தேங்காய் பருப்பு மூட்டை: 19 எடை: 9.18 குவிண்டால் மதிப்பு: ₹113,892/- கிலோ அதிக விலை: ₹140.00 குறைந்த விலை: ₹110.00 சராசரி விலை: ₹125.00 விவசாயிகள் விற்பனை செய்ததாக விற்பனைக் கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.