சித்தாரில் ஜேசிபி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்

52பார்த்தது
சித்தாரில் ஜேசிபி உரிமையாளர்கள் அடையாள வேலைநிறுத்தம்
பவானியை அடுத்த சித்தாரில் மூன்று நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஜேசிபி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பவானி தாலுக்கா எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் சித்தாரில் நேற்று (மே 9) தொடங்கிய இப்போராட்டத்திற்கு சங்கத் தலைவர் என். மேகராஜ் தலைமை தாங்கினார். 

செயலாளர் சன்னியாசிபட்டி சதீஷ், பொருளாளர் குமார் முன்னிலை வகித்தனர். டீசல், ஆயில், உதிரி பாகங்கள், வாகனத்தில் விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜெசிபி உரிமையாளர்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 

ஒன்றரை மணி நேரத்திற்கு ரூ. 2,500-ம், 2 மணி நேரத்திற்கு ரூ. 3,000-ம், அடுத்து இயங்கும் ஒவ்வொரு மணிக்கும் ரூ. 1,200-ம், ஜேசிபி பிரேக்கருக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 2000-ம் என வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வாடகை உயர்வை வலியுறுத்தும் வகையில் வரும் 11-ஆம் தேதி வரையில் இப்போராட்டம் நடைபெறுகிறது. துணைத் தலைவர் சிங்காரம், துணைச் செயலாளர் ராகுல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி