சித்தோடு அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சுமதி (50). கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மாது உயிரிழந்துவிட்டார். தனது மூத்த மகள் மஞ்சு, மருமகன் சுரேஷ்குமார் ஆகியோருடன் வசித்து வரும் இவர், நேற்று முன்தினம் பவானி காலிங்கராயன்பாளையத்தில் உள்ள தனது தாயாரை பார்க்கச் சென்றார்.
பின்னர், மகள், பேரனுடன் வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6. 50 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும், வெள்ளி அரைஞான், வீட்டில் வைத்திருந்த 3 பித்தளை குடங்களையும் காணவில்லை. இதுகுறித்து, சித்தோடு போலீசில் சுமதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.