ஈரோடு: ஏரி, குளங்களில் விடப்பட்ட 1.40 லட்சம் மீன் குஞ்சுகள்

50பார்த்தது
ஈரோடு: ஏரி, குளங்களில் விடப்பட்ட 1.40 லட்சம் மீன் குஞ்சுகள்
அணை மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் வகையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி துறை சார்பில் பவானிசாகர் அணை பகுதியை ஒட்டி மீன் வளர்ப்பு நாற்றங்கால் அமைத்து மீன் குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் விட்டு அணை மீன்களான ரோகு, கட்லா, மிருகால் வகை மீன்களை அதிகளவில் உற்பத்தி செய்ய மீன் வளர்ச்சி துறை திட்டமிட்டு இருந்தது. 

இதற்காக மாவட்டம் முழுவதும் 10 மாதங்களுக்கு மேல் நீர் இருப்பு உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள், கண்மாய்களை மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீன் உற்பத்தியை பெருக்கும் வகையில் ஒரு ஹெக்டர் பரப்புள்ள நீர் நிலையில், 2000 மீன் குஞ்சுகள் வீதம், 70 ஹெக்டர் பரப்பளவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மீன் குஞ்சுகள் மீன் வளர்ச்சித்துறையால் விடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி