ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றது. அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது” என குறிப்பிட்டுள்ளது.