ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இன்று (பிப். 05) காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை கடும் பனிமூட்டத்திலும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். திமுக வேட்பாளர் சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 10.95 % வாக்குகள் பதிவாகியுள்ளது.