போதையில் இருந்த மீனவர் வெட்டிக் கொலை.. 8 பேர் கைது

76பார்த்தது
போதையில் இருந்த மீனவர் வெட்டிக் கொலை.. 8 பேர் கைது
சென்னை: காசிமேட்டைச் சேர்ந்த மீனவர் வினோத் (33) என்பவர் நேற்று (ஜன.15) இரவு வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மது போதையில் இருந்த வினோத், தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பலால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ், நரேஷ்குமார், கோகுல், ரித்திக் ரோஷன், சுனில், முத்து உள்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி