மும்பையில் போக்குவரத்து காவலரை கார் மீது வைத்து 20 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போதையில் காரை இயக்கிய நபரை போக்குவரத்து காவலர் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று நிறுத்த முயன்றனர். இந்நிலையில், போதையில் இருந்த நபர் போக்குவரத்து காவலரை கார் மீது வைத்து 20 கிமீ தூரம் இழுத்துச் சென்றுள்ளார். ஒருவளியாக அந்த போதை இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.