முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ராஜகோபுரத்தில் காட்சி தரும் 40 அடி உயரம் கொண்ட வேல் புதியதாக மாற்றப்படுகிறது. இதற்காக நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட வேல் கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த உடன் மின் விளக்குகளால் ஒளிரும் இந்த புதிய வேல் பொருத்தப்பட உள்ளது.