இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT) சிறப்பு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் அல்லது ஆராய்ச்சியைத் தொடரும் மாணவர்களுக்காக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்.