கீழே கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம்: பஞ்சாப் அரசு எச்சரிக்கை

81பார்த்தது
கீழே கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம்: பஞ்சாப் அரசு எச்சரிக்கை
வயல்வெளி பகுதிகளிலும், சாலையிலும் கிடக்கும் பொருட்களை தொட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு பஞ்சாப் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரை குறிவைத்து பாகிஸ்தான் வீசிய ஏவுகணையை நடுவானில் இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு வீழ்த்தியது. நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் பாகம் பஞ்சாப் மாநில எல்லையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி