மதுரையில் தங்கியிருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர், அதிமுக கூட்டணிக்கு எதிராக பாஜகவினர் பேச கூடாது என அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், “கூட்டணிக்கு எதிராக பேசுவது பாஜகவிற்கு எதிராக பேசுவதற்கு சமம்” என அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. “நயினார் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பலர் ஒத்துழைப்பு வழங்குவதில்லை” என காட்டமாக பேசியிருக்கிறார்.