இன்றைய டிஜிட்டல் உலகத்தில் செல்போன்கள், கம்பியூட்டர் ஆகியவற்றை பார்த்து பலரும் தங்களது கண்களை கெடுத்துக்கொள்கிறார்கள். அவ்வாறு அதிகம் பார்ப்பவர்களுக்கு கண்களில் உலர்வு தன்மை (Dryness) ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக 40 அல்லது 50 வயதில் வரும் உலர்வுத்தன்மை 20 வயதிலேயே வந்துவிடுகிறது. இதனை தடுக்க 20-20-20 ரூல்ஸ் எனப்படும் முயறையை பின்பற்றலாம். அதாவது, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 மீட்டர் தூரம் உள்ளவற்றை 20 நொடிகள் பார்த்தால் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்.