பாதுகாப்புப் படையின் நடவடிக்கைகளை நேரலையாக தெரிவிக்க வேண்டாம் என்று ஊடகங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. "இதுபோன்ற நேரலை தகவல்களை வெளியிடுவது செயல்திறனை பாதிப்பதோடு உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வாய்ப்பும் உள்ளது. செய்தி சேகரிப்பில் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை கடைபிடிக்க அனைவரையும் வலியுறுத்துகிறோம்" என கூறப்பட்டுள்ளது.