சென்னையை சேர்ந்த திமுக தொழிற்சங்க நிர்வாகி கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அயனாவரத்தை சேர்ந்த குமார் (71) தொமுசவில் அனைத்து மாநகராட்சி தொழிலாளர் சங்க பொது செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 16ஆம் தேதி கடத்தப்பட்ட குமாரை செஞ்சி அருகே ஒரு கும்பல் படுகொலை செய்துள்ளது. உறவினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததை தட்டி கேட்டதால் குமார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.