திமுக MP கனிமொழி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார். தூத்துக்குடி MP & திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, இன்று (மே 21) டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். செங்கல் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டிய மனுவை திமுக MP நிதியமைச்சரிடம் வழங்கினார். ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் எதிர்க்கட்சி தலைவரால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது நிதியமைச்சருடன் கனிமொழி சந்தித்து இருக்கிறார்.