திமுக பிரமுகர் கொலை: 2 தனிப்படை அமைப்பு

64பார்த்தது
திமுக பிரமுகர் கொலை: 2 தனிப்படை அமைப்பு
மதுரை தனக்கன்குளத்தில், நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் திமுக மண்டல தலைவர் வீ.கே.குருசாமியின் ஆதரவாளர் காளிஸ்வரன் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என குருசாமியின் தரப்பினர் சந்தேகிக்கின்றனர். காளிஸ்வரனின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 5க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி