விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, பேரணி நடத்த தேமுதிக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், போலீசார் இதற்கு அனுமதி தரவில்லை. இதனை விமர்சித்த பிரேமலதா, தேமுதிகவை கண்டு திமுக அஞ்சுவதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள சேகர்பாபு, அச்சம் என்றால் என்னவென்றே தெரியாத இயக்கம் திமுக என்றும், தற்போது மறப்போம், மன்னிப்போம் என்ற பாதையில் நடைபோட்டு வருவதாகவும் கூறினார்.