திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டம் நடத்த இருந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசையை போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இதற்கு பாஜக மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தொடைநடுங்கி திமுக அரசு, அக்கா தமிழிசை சௌந்தரராஜனை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள்” என்றார்.