புதுச்செட்டியூரைச் சேர்ந்த வளர்மதி என்பவர் கூம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், நிலத்தகராறில் புதுச்செட்டியூரைச் சேர்ந்த நடராஜன், ரங்கராஜ், கண்ணம்மாள், மதன்குமார் ஆகிய நான்கு பேரும் தனது வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து, வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் கூரையை உடைத்து சேதப்படுத்தியதாகவும், கற்களை வீசி தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.