வேடசந்தூர் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. நடந்தது. ஐந்து ஆண்டு கால நிர்வாகத்தின் கடைசி கூட்டம் என்பதால், தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தேவசகாயம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாதாந்திர செலவினங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், குமரன், மாவட்ட கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, தாமரைச்செல்வி மற்றும்
தி. மு. க. , நிர்வாகிகள் ரவிசங்கர், மருதபிள்ளை, கவிதாமுருகன், முத்துக்கிருஷ்ணன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.