வேடசந்தூர்: சட்டவிரோதமாக மீட்டிங் நடத்த அனுமதி வழங்க கூடாது

68பார்த்தது
திவ்வியராகினி என்பவர் திண்டுக்கல்லில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லைகள் நடைபெறுகிறது என்று வெளிநாடுகளில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு பொய்யான செய்தியை அனுப்பியும், மேலும் ஆலை உரிமையாளர்களை மிரட்டியும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் சட்ட விரோதமாக அரசு பதிவு செய்யாத அமைப்பை வைத்துக்கொண்டு திவ்வியராகினி செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீதும், அந்த அமைப்பு மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஐசிசி கமிட்டியை சட்டப்படி ஆலை நிர்வாகம் தான் நடத்த வேண்டும். ஆனால் திவ்வியராகினி தலைமையில் நடைபெற்று வருகிறது இது சட்டவிரோதமான செயலாகும். இதற்கு ஆதாரமாக நாச்சி கார்மெண்ட்ஸ் ஆலையில் ஐசிசி கமிட்டி மினிட் நோட்டை கைப்பற்றி விசாரிக்க வேண்டும். ஆலைக்குள் மீட்டிங் ஹாலில் உள்ள சிசிடிவி கேமரா புட்டேஜ் பரிசோதிக்கப்பட வேண்டும்.

எனவே இந்த சட்டவிரோதமான பணம் பறிக்கும் கூட்டத்தை ஆலைக்குள் செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வெளிநாட்டினர் ஆலைக்குள் வருவதால் தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த தொழிலாளர்களையும் தொழிற்சாலைகளையும் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு அதிகாரிகள் ஆலைக்குள் வருகின்ற வெளிநாட்டினரையும் அவர்களின் கைக்கூலி திவ்விய ராகினியையும் ஆலைக்குள் அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி