வேடசந்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு நாள்தோறும் ஏராளமான குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
வேடசந்தூர் நகர் பகுதியில் 178 இடங்களில் தீ வைத்து எரிக்கப்பட்டு மீதமுள்ள குப்பைகள் மாரம்பாடி ரோட்டில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கும் குப்பைகள் நிறைந்து விட்டதால் அதனை சிமெண்ட் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்பவும், கழிப்பறை தண்ணீர் நேரடியாக குடகனாற்றில் கலக்காமல் சுத்திகரிப்பு செய்யவும் ஜெர்மனியைச் சேர்ந்த வேகா பவுண்டேஷன் உதவியுடன் ரெட்டியார்சத்திரம் வாஸ் இன்ஸ்டிடியூட் தன்னார்வலர்கள் மற்றும் எஸ் எஸ் எம் கல்லூரி தன்னார்வ மாணவர்கள் வேடசந்தூர் பேரூராட்சியுடன் இணைந்து ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் காட்டு பாவா செட் ஆய்வு செய்தார்.