வேடசந்தூர்: விநாயகர் சிலையை கீழே தள்ளிவிட்டவரால் பரபரப்பு

54பார்த்தது
வேடசந்தூர் ஆத்துமேட்டில் உள்ள கலையரங்கம் பின்புறம் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிலைக்கு கேட் போட்டு பூட்டப்பட்டிருந்தது. கோவிலில் சிறிய கேட் உடைக்கப்பட்டு விநாயகர் சிலை மற்றும் நந்தி சிலை ஆகியவை கீழே தள்ளிவிடப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து இந்து மக்கள் கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இந்து மக்கள் கட்சி ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். விநாயகர் சிலை தள்ளிவிடப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் பூட்டை உடைத்து சிலையை கீழே தள்ளிவிட்டுச் சென்றது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி