குன்னம்பட்டியில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது

60பார்த்தது
குன்னம்பட்டியில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது
நாகம்பட்டி ஊராட்சி குன்னம்பட்டியில் ஸ்ரீ வீருதிம்மம்மாள் மாலைகோயில், ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ லட்சுமி ரங்கநாதர் தெய்வங்களின் மகா கும்பாபிஷேகம், பெரிய கும்பிடு விழா நடந்தது. புனித நீர் அழைத்து வருதல், யாக வேள்வி, மஹா தீபாராதனையை தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அன்னதானம், பொதிக்கால் நடுதல், பூக்கூடை அழைத்தல், அம்மன் அலங்காரம், பெண்களுக்கு சேலை கொடுத்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரவு வண்ணமயமான வாண வேடிக்கை நடந்தது.

தொடர்புடைய செய்தி