கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

685பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல்.

தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2023-24ஆம் ஆண்டில் 7. 760 எண்ணிக்கையிலான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 280 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடத்தப்படவுள்ளது.

இம்முகாம்களில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள், சினை பரிசோதனை, அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய்த்தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளானது கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கான முகாம்களை துவக்கி நடத்திடும் பொருட்டு, துவக்க விழாவாக வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஸ்தூரிநாயக்கன்பட்டி கிராமத்தில் 10. 10. 2023 அன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி