தமிழ்நாடு மாநில பூப்பந்தாட்ட கழகம் மற்றும் பிஎஸ்என்ஏ பொறியியற் கல்லூரியும் இணைந்து மாநில அளவிலான மெகா பூப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன.
திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், சென்னை, சேலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி ஆண்கள், பெண்கள், மூத்தோர் என ஒற்றையர், இரட்டையர், ஐவர் என 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் மொத்தம் 270 அணிகள் பங்கேற்றன.
கடந்த 28ந் தேதி முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றன.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ,
பள்ளிகளுக்கு இடையேலான பெண்கள் பிரிவில் முதல் பரிசாக மதுரை
ஓ. சி. பி. எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்று கோப்பையை வென்றது,
இரண்டாம் பரிசாக சென்னை சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் அணியும்,
3-ம் பரிசாக சேலம்அரசு மேல்நிலைப் பள்ளி அணிகள் வெற்றி பெற்றது.
பள்ளிகளுக்கு இடையேயான ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக வத்தியாயிருப்பு
இந்து மேல்நிலைப் பள்ளி, இரண்டாம் பரிசாக திண்டுக்கல்
எஸ்வி எச்எஸ்எஸ் பள்ளி அணியும்,
3ம் பரிசாக அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் வெற்றி பெற்று கோப்பைகளை வென்றன.
பரிசளிப்பு விழாவில் கல்லூரி அறக்கட்டளை இயக்குனர் சூர்யா ரகுராம், கல்லூரி முதல்வர் வாசுதேவன் மற்றும் பூப்பந்தாட்ட மாநில நிர்வாகிகள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.