திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் நலனுக்காக பழனி கிரிவீதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஆனந்த விநாயகர் சன்னதி மற்றும் வீர துர்க்கை அம்மன் கோயிலில் பூஜை நடைபெற்றது. மேலும் அழகுநாச்சியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடைபெற்றது