திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு, நலன் வேண்டி கிரிவீதியில் உள்ள வீரதுர்க்கை அம்மன் கோயிலில் கும்ப கலசங்கள் வைத்து திசாஹோமம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசநீரில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், பழனிவேல், கார்த்திகேயன், அசோக்குமார், செந்தில்குமார் கலந்துகொண்டனர்.