திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமன்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் புரட்டாசி நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி வரை, பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.