பழனி முருகன் கோவிலில் 'ஓம் முருகா' நீயான் மின் விளக்கு

52பார்த்தது
பழனி முருகன் கோவிலில் 'ஓம் முருகா' நீயான் மின் விளக்கு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் வடக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் வேலுடன் கூடிய 'ஓம் முருகா' எனும் எழுத்துக்களை கொண்ட நியான் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. 

தற்போது கோயில் சார்பில் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் இதே போன்ற 'ஓம் முருகா' எழுத்துக்களை உடைய நியான் மின்விளக்கு கிழக்கு வெளிப்பிரகார மண்டபத்தின் மேல் பகுதியிலும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ரோடு பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் வெகு தொலைவில் இருந்தே 'ஓம் முருகா' எனும் ஒளியை கண்டு ரசிக்கலாம். 

இதுபோல் அடிவாரம் கிரிவீதியில் பாத விநாயகர் கோயில் அருகே எல்.இ.டி. 'டிஸ்ப்ளே' பொருத்தப்பட்டு வருகிறது. இதில் கோயில் நிகழ்ச்சிகள், தகவல்கள் டிஜிட்டல் தகவல் பலகை மூலம் பதிவிடப்படும். இதன் மூலம் பக்தர்கள் எளிதில் விவரங்களை பெறலாம்.

தொடர்புடைய செய்தி