திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (32). கூலித்தொழிலாளி. தனது மோட்டார் சைக்கிளில் வரட்டாற்று பாலம் பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.