திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள எருமை நாயக்கன்பட்டி இயற்கை தேன் பண்ணை மற்றும் தேன் வளர்ப்பு பயிற்சி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் விவசாயிகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தேனீ வளர்ப்பு பயிற்சி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தேனிகள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றியும் இந்நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது