திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி அலுவலகத்தில் இன்று (ஜனவரி 11) சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நகராட்சி வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்