திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பா.ஜ.க மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடுமையாக பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. அதில், அவரது கட்சியைச் சேர்ந்த எல்லைதுரை என்பவரின் மனைவி புவனேஸ்வரி குறித்து தான் கனகராஜ், அவதூறாக பேசியுள்ளார் என போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கனகராஜை கைது செய்தனர்.