திண்டுக்கல்: பழனி உஜ்ஜயினி மாகாளியம்மன், கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில்களில் வருடாபிஷேகம் நடைபெற்றது. பழனி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்கள் வைத்து யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.