திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்கச் சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதால் பேபி ஸ்ரீயும், நாக சக்தியும் தண்ணீரில் மூழ்கினர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜ் தனது மகள்களைக் காப்பாற்ற முயன்றார். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.