பாசனத்திற்காக பரப்பலாறு அணை திறப்பு

155பார்த்தது
பாசனத்திற்காக பரப்பலாறு அணை திறப்பு
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை நீரை பாசனத்திற்காக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மலர் துாவி திறந்து வைத்தார். இதன் மூலம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெருமாள்குளம், முத்து பூபாலசமுத்திரம் கண்மாய், சடையன் குளம், செங்குளம், ராமசமுத்திரம் கண்மாய், ஜவ்வாதுபட்டி பெரியகுளத்துக்கு 47. 04 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தாசரிபட்டி, விருப்பாச்சி, தங்கச்சியம்மாபட்டி, வெரியப்பூர், ஜவ்வாதுபட்டி கிராமங்களில் உள்ள 1323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் தாசில்தார் முத்துச்சாமி, கண்காணிப்பு பொறியாளர் பாண்டி, செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர்கள் நீதிபதி, மூர்த்தி, உதவி பொறியாளர் கோகுலக்கண்ணன், ஒன்றிய தலைவர் அய்யம்மாள், தி. மு. க. , ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜ், ஜோதீஸ்வரன், துணைச் செயலாளர்கள், முருகானந்தம் சிவக்குமார், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி