குரும்பபட்டி ஊராட்சியில் சிறுபாசனக் குளங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், வீரராகவன் குளத்தில் அவதார் செராமிக் நிதி உதவியுடன் மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் இன்று துவங்கப்பட்டன. இதில் திட்ட அலுவலர் திலகவதி, யூனியன் சேர்மன் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், அண்ணாதுரை, திமுக ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.