கொடைக்கானல்: காய்கறிகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்

52பார்த்தது
கொடைக்கானல்: காய்கறிகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைப் பகுதிகளான பூண்டி, கிளாவரை, போலூர், கூக்கால், மன்னவனூர், குண்டுபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் கேரட், பீட்ரூட், நூக்கல், உருளை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பகுதிகளில் காட்டுப் பன்றிகள், குரங்குகள், காட்டு மாடுகள் அதிகளவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதுகுறித்து வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி