தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் வத்தலகுண்டு கிளையின் சார்பாக வத்தலகுண்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிறர் சுப்பிரமணிய சிவாவின் 140 ஆவது பிறந்த நாள் விழா நடந்தது. அன்னார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தமுஎகச கிளைத் தலைவர் ரமேஷ் பாண்டிதலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் கி. லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சுப்பிரமணிய சிவா படத்திற்கு மாலை அணிவித்தார். அதைத்தொடர்ந்து கிளை உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செய்தார்கள். நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள் அலெக்சாண்டர், வழக்கறிஞர் ராஜா, திரைக்கலைஞர் சோனை முத்தையா பாடகர் ராசுகண்ணன், செந்தில், நாக பாண்டி, மாரி, வின்சென்ட், கிளைத் துணைத் தலைவர் விஜயவேல் நன்றி கூறினார்.