நத்தம் மாரியம்மன் அன்ன வாகனத்தில் நகர்வலம்!

3275பார்த்தது
நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப்பெருந்திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாரியம்மன் அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் மின்ரதத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி