கொடைக்கானல்: கள்ள சந்தையில் மது விற்பதால் பொதுமக்கள் அவதி

61பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் வடகவுஞ்சி ஊராட்சிக்குட்பட்ட செம்பரான் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் அப்பகுதியில் சட்டத்துக்கு விரோதமாக நடத்திவரும் மதுக்கடையை அகற்றுவதற்காக அப்பகுதியில் உள்ள பெண்கள் கொடைக்கானல் காவல்துறையினரிடம் புகார் அளிப்பதற்கு வந்துள்ளனர். செம்பரான் குளம் கிராமத்தைச் சுற்றி பார்ச்சலூர், பன்றிமலை, ஆடலூர், வடகவுஞ்சி, கருவள்ளப்பட்டி போன்ற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 

இப்பகுதியில் அதிகளவு பழங்குடியினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி வேலை ஒன்றுமட்டுமே வாழ்வாதாரமாக இருந்துவருவதாக கூறினர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஆண்கள் தினந்தோறும் குடித்துவிட்டு பெண்களிடம் சண்டையிடுவதும், சாலையில் செல்லும் பெண்களைக் கேலிக்கைபார்ப்பதும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. பெண்கள் வேதனையுடன் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கும்போது தங்களது குடும்பத்தின் நிம்மதியும் சந்தோசமும் கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுப்பாட்டில்களால் கெட்டுச் சீரழிகிறது எனவும் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியைக் கடக்கும்போது ஆண்கள் குடித்துவிட்டு தகாத வார்த்தைகள் பேசுவதும் குழந்தைகளுக்குத் தொந்தரவு கொடுப்பதாகவும் கூறிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி