ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் 1000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை ஒன்றிய பெருந்தலைவர் துவக்கி வைத்தார்
மே 17 2023 திண்டுக்கல் அருகே
ஆலமரத்துப்பட்டி ஊராட்சி இந்திராகாலனியில் ரூ. 15லட்சம் மதிப்பில் 60ஆயிரம் லிட்டர் கொள்ளவு உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை ரத்தினகிரியில் நடைபெற்றது. ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் பூமி பூஜையில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களில் வசிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி குடிதண்ணீர் கிடைக்க மேல்நிலை தண்ணீர் தொட்டி மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்ய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் அனைத்து கிராமங்களிலும் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகின்றன. ஆலமரத்துப்பட்டி ஊராட்சி ரத்தினகிரியில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி சேதமடைந்ததை அடுத்து கிராம மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களிடம் புதிதாக மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்ட கோரிக்கைவிடுத்திருந்தனர்.
அதன்படி ஊராட்சியின் நமக்குநாமே திட்டம் மூலம் ரூ. 15லட்சம் மதிப்பில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலமரத்துப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச்செயலாளர் ஒன்றிய துணைச்செயலாளரும், அரசு ஒப்பந்தகாரருமான ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஒன்றிய பெருந்தலைவர் மகேஸ்வரி முருகேசன் பூமி பூஜையில் கலந்துகொண்டு மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய
திமுக செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், ஊராட்சி மன்ற செயலாளர் பாலதண்டாயுதபானி, ஊராட்சி இளைஞரணியை சேர்ந்த விக்னேஷ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் அரவிந்தன், ஊராட்சிமன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவாக ஊராட்சி செயலாளர் பாலதண்டாயுதபாணி நன்றி கூறினார். கோரிக்கைவிடுத்தவுடன் உடனடியாக மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்ட உத்தரவிட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களுக்கும், ஊராட்சிமன்ற நிர்வாகத்திற்கும் இந்திராகாலனி பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.