தோட்டனூத்து: இலங்கை அகதிகள் முகாம் ஆய்வு

75பார்த்தது
திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து பகுதியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் குடியிருந்த இலங்கை அகதிகள் இப்பகுதியில் குடி அமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையில், அளவில்

இலங்கை அகதிகள் மறுவாழ்வு துறை ஆணையர் வள்ளலார் ஐ. ஏ. எஸ் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்கள், குடிநீர், சுகாதாரம், உதவித்தொகை மற்றும் மின்சார வசதிகள் குறித்து முகாமில் உள்ளவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, இலங்கை அகதிகள் முகாமில் கட்டித் தரப்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதமடைந்தும், சாலைகள் சேதம் அடைந்தும், சாலைகளில் கழிவு நீர் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாக இலங்கை அகதிகள் தெரிவித்தனர்.

மேலும், இலங்கை அகதிகளுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கக்கூடிய அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருள்களும் தரம் இல்லாமல் வழங்குவதாக குற்றச்சாட்டை முன் வைத்து மனு அளித்தனர்.

மேலும் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாவதாகவும் ஆணையர் வள்ளலாரிடம் புகார் அளித்தனர்.

இந்த ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி