ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியில் ரூ. 1.11 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, 4 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 3.00 இலட்சம் மதிப்பீட்டிலான சமுதாய முதலீட்டு நிதியை வழங்கினார்.
ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை ஊராட்சியில் ரூ. 36.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், சிறுமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 75.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய 3 கூடுதல் வகுப்பறை கட்டடம் என மொத்தம் ரூ. 1.11 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், உதவி செயற்பொறியாளர் (ஊ.வ) ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பத்மாவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, இராஜசேகரன், பாலசுப்பிரமணியன், சிறுமலை ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா வெள்ளிமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.