நத்தத்தில் குண்டும் குழியுமான சாலை - கதறும் வாகன ஓட்டிகள்

13254பார்த்தது
நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் அவுட்டரில் இருந்து செங்குளம் வரை குண்டும் குழியுமாகவும், தூசி பறக்கும்சாலையாக உள்ளது. இதனால் நேரு நகர் மற்றும் இந்த வழியாக செங்குளம், பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி, புதுப்பட்டி செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினந்தோறும் சிறு விபத்துகளில் சிக்கி ஆளாகி வருவது மட்டுமல்லாமல் தூசி பறக்கும் காரணத்தினால் அந்த பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பல வருடங்களாக குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலை நெடுஞ்சாலை துறைக்கு? கண்ணில் தெரிகிறதா இல்லையா என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி